Friday, March 29, 2024

பாஜக கருப்பு முருகானந்தத்தின் சொத்துக்களை முடக்க தயாரா? அமலாக்கத்துறைக்கு அபூபக்கர் சித்திக் சவால்!!

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுபேசிய அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா அலாவுதீன், தங்களை காக்க யாரும் வர போவதில்லை, தாங்களே வீதிக்கு வந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என மக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் கூறுவதாக தெரிவித்தார். மேலும் வங்கி கணக்குகளை முடக்கினாலும் பாப்புலர் ஃப்ரண்ட் பணியை முடக்கிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய  SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், இந்தியாவிலேயே ராணுவம், ரயில்வேக்கு அடுத்து அதிக நிலங்களை கொண்ட அமைப்பு வக்ப் வாரியம் என்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அடித்தால் திருப்பிஅடி என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்ட் என சுட்டிக் காட்டிய அவர், பாஜக-வின் கருப்பு முருகானந்தம் வைத்திருக்கும் கோடி கோடியான கருப்பு பணத்தை அமலாக்கத்துறை சோதனையிட தயாரா? என அந்த துறைக்கு சவால்விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...