அதிராம்பட்டினம் ஆலடிதெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் வணிகரான இவருக்கு அதிரை அருகே விவசாய நிலம் இருக்கிறது.
சம்பவத்தன்று காலையில் தமது ராயல் என்பிஃல்டு புல்லட் பைக்கை தமது தோப்பிற்கு ஓட்டி சென்றுள்ளார் அப்போது பெட்ரோல் டேங்க் வழியே புகை கிளம்பியுள்ளதை கவனித்த வாகன ஓட்டி ஓரமாக நிறுத்தியுள்ளார்.
அப்போது திடீரென வெடித்த புல்லட் தீபற்றி எரிய தொடங்கியுள்ளது.
இதனை அணைக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை என கூறுகிறார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும், சட்ட ரீதியாக அனுக காவல் நிலையத்தை நாடியாதாகவும் தெரிகிறது.
காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவும்,காப்பீட்டு தொகையை பெருவதற்ய் ஏதுவாக மனு அளிக்க சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் PM பந்தோபஸ்த்துக்கு சென்றுள்ளார் ஆதலால் அவர் வந்த பிறகே மனுவை ஏற்போம் என தட்டி கழித்து இருக்கிறார்கள் என்கிறார் புகார் மனுதாரர்.