தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக ஏர்டெல் நெட்வொர்கிள் சிக்கினல் பிரச்சனை , கால் செய்தால் சென்றடையவில்லை இது போன்று அதிகமான பிரச்சனைகளை வாடிக்கையாளர்கள் தினமும் சந்தித்து வருகின்றனர்.
புகார் அளிக்க 198 தொடர்பு கொண்டால் அதுவும் சரியான முறையில் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த புகார் அளிக்க 1ஐ அழுத்தவும் என்று கூறுகிறது ஆனால் அந்த எண் பயன்படவில்லை இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் கவலைக்குள்ளாகினர்.
லக் அடித்து புகார் அளிக்க வாய்ப்பு கிடைத்தால் எதிர்புறம் இருக்கும் ஏர்டெல் சேவையாளர்கள் நெட்வொர்க் சரிசெய்து வருகிறோம் , இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். இதுபோன்று பதில்களை வருட வருடமாக கூறி கொண்டு இருக்கிறார்கள் என வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் கூறுகையில்:
விரைவில் சிக்கினால் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் நெட்வொர்க் சேவைக்கு செலுத்திய பணம் தொகையை திருப்பிதர வேண்டும். அதுவும் இல்லையென்றால் மாற்றும் நெட்வொர்க் மொத்தமாக மாறிவிடுவோம் என கடுமையான குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.