Saturday, April 20, 2024

அதிரையில் இந்த நிலத்தை வாங்காதீங்க! பகிரங்கமாக அறிவித்த சித்தீக் பள்ளிவாசல் நிர்வாகம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை புதுமனை தெருவில் அமைந்துள்ளது சித்தீக் பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தீக் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் ” அதிராம்பட்டினம் கிராம புல எண்: 255/4A-ல் ஒரு ஏக்கர் 54 சென்ட் நிலம் சித்தீக் பள்ளிவாசலுக்காக வஃக்பு செய்யப்பட்டதாகும். இச்சொத்தில் ஒரு சில பகுதிகளை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்து சென்னை வஃக்பு தீர்ப்பாயத்தில் வழக்கு எண்: 0A 45/2018ஆக பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இச்சொத்தானது இந்த அறிவிப்பு பலகைக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலுள்ள காலி நிலங்கள், கட்டிடங்களை உள்ளடக்கியதாகும். வஃக்பு சொத்துக்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதம். ஆகவே இச்சொத்துக்களை விற்கவோ வாங்கவோ உரிமை இல்லை. மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...