Saturday, April 20, 2024

குற்ற உணர்ச்சியால் நிம்மதியை இழந்த அதிரை திமுக கவுன்சிலர்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக தலைமையின் சார்பில் நிறுத்தப்பட்ட தில்நவாஸ் பேகத்திற்கு வெள்ளிக்கிழமை காலை வரை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன். ஆனால் அன்றைய பிற்பகலில் திடீரென மறைமுக தேர்தலில் தில்நவாஸ் பேகத்தை எதிர்த்து போட்டியிட்ட அதே இராம.குணசேகரன், கூட்டணி தர்மத்தை மீறி வெற்றிபெற்றார்.

இந்நிலையில், நீ தான் துணை தலைவி என நம்பிக்கை அளித்து களத்தில் இறக்கிவிட்டு கடைசி நேரத்தில் நிராயுதபாணியாக நிறுத்தி தில்நவாஸ் பேகத்தை தோல்வி அடைய செய்ததை எண்ணி அதிரை திமுக  அதிருப்தி கவுன்சிலர்கள் தூக்கத்தை தொலைத்து நிம்மதியை இழந்து விட்டதாக தெரிகிறது.

ஆயிரமாயிரம் இடர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே, கூட்டணி தர்மத்தை மீறிய திமுக-வினரின் செயல் காரணமாக குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்பதாக அறிவித்திருக்கிறார். இதனிடையே செய்த தவறுக்கு எவ்வாறான வகையில் பரிகாரம் தேடிக்கொள்ள போகிறார்கள் அதிரை திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...