அதிரை நகராட்சியை அறுதிபெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ள சூழலில் ஒருவாரம் கடந்தும் நகர்மன்ற தலைவியை தேர்வு செய்ய முடியாமல் திமுக திணறி போயுள்ளது. இதனிடையே கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுக-வை தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் ஏற்றிய மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்நிலையில் அதிரையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிலரை தவிர்த்து பிற திமுக கவுன்சிலர்கள் மற்றும் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பங்கேற்காமல் போனது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது அதிரையில்? மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கணவர்கள் எங்கே? என்ற கேள்விகள் பொதுமக்களிடையே பேசும் பொருளாகியுள்ளது.