அதிரை 12வது வார்டுக்குட்பட்ட நடுத்தெருவில் நீண்ட காலமாக இரும்பு மின்கம்பம் ஒன்று மக்களுக்கு இடையூறாக இருந்துவந்தது. இதுகுறித்து 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து களத்தில் இறங்கிய அவர், சம்மந்தப்பட்ட இரும்பு மின் கம்பத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினார்.