அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் விரைவில் நடத்த இருப்பதாக தெரிகிறது.
27வார்டுகள் கொண்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் 20இடங்களை திமுக கூட்டணி பிடித்து இருக்கிறது.
இதில் கடந்த முறை சேர்மன் பதவி வகித்த அஸ்லம் 2வது வார்டில் வென்றிருக்கிறார்.
இதுதவிர சுமார் 40ஆண்டுகால அதிரையை தன் வசம் வைத்திருந்த MMS தாஹிரா அம்மாள் 10 வது வார்டில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.
இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட சேர்மன் பதவிக்கு தகுதியுடையவர்கள் தாம்.
இந்த நிலையில் சேர்மன் பதவிக்கு என போட்டி போடும் இருவருமே பலத்தில் சம பங்கு வகிக்கிறார்கள்.
பொதுவாக இருவருமே திமுகவில் சமீபத்தில் இணைந்தவர்கள் என்றும் கட்சியின் முன்னோடிகளில் சிலரும் பதவிக்கு ஏங்குவதாக தெரிகிறது.
குறிப்பாக அதிக வாக்கு எண்ணிக்கையில் வென்ற ஒருவருக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவலும் நெட்டிசன்களால் பரப்பபட்டு வருகிறது.
அதற்கான சாத்திய கூறுகள் இருக்கும் பட்சத்தில் நகர நிர்வாகமும் இசைவு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.