அதிராம்பட்டினம் கடற்கரை தெரு வார்டு எண் 23 வாக்கு சாவடியில் 296வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில் வாக்கு இயந்திரம் பழுதாகி விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாக்கு செலுத்த வந்த பொதுமக்கள் வீடு திரும்பினர்.
வாக்கு இயந்திரம் பழுதால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.