Friday, March 29, 2024

சுயேட்ச்சை சின்னமான தண்ணீர் குழாய்க்கு பெருகும் ஆதரவு : தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலையொட்டி சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 9 நாட்களே மீதமுள்ள நிலையில், அதிரையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

27 வார்டுகளை உள்ளடக்கிய அதிரை நகராட்சியில், மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலில், சுயேட்ச்சை வேட்பாளர்களுக்கு, தென்னைமரம், அசைந்தாடும் நாற்காலி, வைரம், தண்ணீர் குழாய், மேற்சட்டை (கோட்) ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவின் கோட்டையாக திகழ்ந்து கொண்டிருக்கும் அதிரையில், ஆளும் திமுக அரசு வார்டு மறுவரையரையில் குளறுபடிகள் செய்துள்ளதாக கூறி அதிரை நகர மக்கள் திமுக அரசின் மேல் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதனால் சமூக கட்சி சுயேட்சைக வேட்பாளருக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...