Friday, April 19, 2024

இந்துத்துவ மாணவர்களுக்கு பதிலடி! பயமில்லாமல் ஒற்றை ஆளாக நின்ற இஸ்லாமிய மாணவி!

Share post:

Date:

- Advertisement -

கர்நாடகாவில் பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் காவி நிற துண்டு அணிந்து வருகிறார்கள்.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினார். ஆனால் அந்த மாணவி அங்கிருந்து ஓடாமல்..பயமில்லாமல் அவர்களை பார்த்து அஞ்சாமல் தனியாக நின்றார்.

அங்கு மாணவர்கள் பலர் சுற்றி நின்று கோஷம் எழுப்பினாலும்..அந்த இஸ்லாமிய மாணவி தனியாக நின்று கையை உயர்த்தி அல்லாஹ் அக்பர் என்று கோஷம் எழுப்பினார். எனக்கு பயம் இல்லை என்பது போல சத்தமாக இவர் கோஷம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. சக மாணவ, மாணவியர் இப்படி கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மத ரீதியாக இப்படி மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...