உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து தரப்பு கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். OSK (ஒன்றபட்ட சமுதாயக் கூட்டமைப்பு) அனைத்து சமுதாயக் கட்சிகள், இயக்கங்களை ஒருங்கினைத்து இத்தேர்தலில் களம் காண முடிவெடுத்தது.
இதில் தமுமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் OSK கூட்டணியில் வார்டு தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியில் சேர விருப்பமில்லாமல் சுயேட்சையாக தனித்து களம் காண முடிவெடுத்துள்ளது.
பொதுவாக தேர்தல் போன்ற முக்கிய காலங்களில் சமுதாய இயக்கங்கள் ஒரு சேர தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் அனைத்து இஸ்லாமிய தரப்பு மக்களின் மிகுந்த எதிர்பார்பாக இருந்து வருகிறது.
இச்சூழலில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வழக்கம் போல சமுதாய இயக்கங்கள், கட்சிகள் ஒரு பக்கம் சுயேட்சையாகவும், இன்னொரு பக்கம் கூட்டணியாகவும் தனித்து செயல்படுவது அதிரையர்களை முகம் சுளிக்க வைக்கிறது.