Friday, April 19, 2024

அதிரை நகராட்சி தேர்தல்! சம்சுல் இஸ்லாம் சங்கத்தை சீண்டி பார்க்கும் உள்ளூர் புள்ளிகள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி வார்டு மறுவரையரை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்பம் முதலே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட 6 வார்டுகளுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றபோதும், மக்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்காமல் அவசர கதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வார்டுகள் மறுவரையரையை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எல்லைகளை தீர்மானித்தத்திலும் குளறுபடிகள் நடந்துள்ளன. கடந்த நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஹல்வா துண்டுபோல திமுகவுக்கு விழுந்தது. பாசிச சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திமுக-வை மக்கள் ஆதரித்தனர். ஆனால் இப்போது அந்த சங்கத்தையே அரசியல் காய்நகர்த்தல் மூலம் சீண்டி பார்க்கின்றனர் உள்ளூர் புள்ளிகள்.

இந்நிலையில், வார்டு மறுவரையரை குளறுபடிகளை கண்டித்து வரும் 19ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சம்சுல் இஸ்லாம் சங்கம் முடிவு செய்துள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு நீதிக்கு தோள்கொடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...