தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நேற்று மாலை 4.30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் கஸ்தூரி, திவ்யா, அஞ்சுகம், சத்தியா ஆகிய ஆசிரியர் முன்னிலையில் அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண் (2)பள்ளியின் ஆசிரியர்கள் நேற்று முதல் நாள் வகுப்புகளை துவக்கி வைத்தனர் .இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் இதில் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடல்களும் விளையாட்டுடன் கூடிய படிப்புகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
ஏற்பாடுகளை முத்தம்மாள் தெரு கிராம பஞ்சாயத்து பொறுப்பாளர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் அருமையான முறையில் அங்கு உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்கள் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
தமிழ்தாய் வாழ்த்து கூறிய மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
சிறப்பாக ஏற்பாடுகள் செய்து கொடுத்த முத்தம்மாள் தெரு கிராம நிர்வாகம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்திற்க்கும் நன்றி தெரிவித்தனர்.