தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை இரண்டும் சேர்ந்தும் தீவிர மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது. இதனால் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும். சென்னையில் மிதமானது முதல் கனமானது வரையிலான மழை பெய்யும்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 2 வரை 3 நாட்களுக்கு அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் வரும் நவம்பர் 2-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு என்று கணிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம மாவட்டங்களிலும் வரும் நவம்பர் 2-ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் 4 தென்மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது கூடுதலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.