Friday, April 19, 2024

15 நாட்களில் நல்ல செய்தி வரும் ! காத்திருக்கும் அதிரை பயணிகள்..!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் – காரைக்குடி குறுகிய இருப்பு பாதையைஅகல பாதையாக மாற்ற அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை உள்ளிட்ட சமூக அமைப்புகள் கட்சிகள்,இயக்கங்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தன.

இதன் பலனாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசானது மனமிறங்கி அகலப் பாதைக்கான பணிகளை தொடங்கியது.

இருப்பினும் இதற்க்காக போதிய நிதிகளை ஒதுக்கவில்லை.

அவ்வபோது சிறு தொகைகளை மாத்திரமே ஒதுக்கி கண்துடைப்பு பணிகளை மேற்கொண்டது.

அதன்பின்னர் வந்த பாஜக அரசு இவ்வழித்தடத்தில் பூர்வாங்க பணிகளை முடுக்கி விட்டது.

பணிகள் 100%பணிகள் நிறைவடைந்தும் கேட் கீப்பர்களை இன்னும் நியமிக்கப்படாமல் இருக்கிறது.

இதனிடையே திருவாரூர்- காரைக்குடி இடையே டெமு இரயில் இவ் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங்கில் இரயிலை நிறுத்தி கேட்மூடி திறந்து செல்வதால் பயண நேரம் அதிகரிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அதிராம்பட்டிணம் இரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் சார்பில் இரயில்வே பொது மேலாளர் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி, தொழிலதிபர் எம் எஸ் ஷிஹாபுதீன், சமூக ஆர்வலர் அப்துல் ரஜாக், உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர் 15 நாட்களில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தாக அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கத்தினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...