Friday, April 19, 2024

அதிரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவிகள் – மாஸ்க், சானிடைசர் கொடுத்து வரவேற்பு!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ மாணவிகள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர்.

அதன்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள பள்ளிகள் 9,10,11,12ம் வகுப்புகளின் மாணவ, மாணவிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த மாணவிகளுக்கு அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிரை காதிர் முகைதீன் பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு, ரோட்டரி சங்கம் சார்பில் தரமான மாஸ்க் மற்றும் கிருமி நாசினி வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.A. ஜமால் முகம்மது முன்னிலையில் மாஸ்க் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சுராஜ், பள்ளி ஆசிரியைகள், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn.A.M. வெங்கடேஷன், Rtn.S. சாகுல் ஹமீது, தலைவர் தேர்வு Rtn.Z. அகமது மன்சூர் ஆகியோர் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...