Friday, April 19, 2024

முஸ்லீம் சிறைவாசிகளின் விடுதலை குறித்து சிறுபான்மையினர் ஆணையத்தலைவரை சந்தித்த தமிமுன் அன்சாரி!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸுடன் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமையில் மஜக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர்.

அப்போது, தமிழக சிறைகளில் சமூக வழக்குகளில் கைதாகி 10 வருடங்களை தாண்டி 20 வருடங்களுக்கும் மேலாக வாடி வரும் முஸ்லிம் கைதிகளின் முன் விடுதலை மற்றும் அவர்களின் மனித உரிமைகள் குறித்த மனு ஒன்றை மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் கையளித்து விளக்கி கூறினார்.

மேலும் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதால், அவர்கள் தொழில் தொடங்கவும், வருமானம் ஈட்டவும் உரிய வழி வகைகள் குறித்து ஆணையம் சார்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் சென்னை IIT-யில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்தும், அங்கு காட்டப்படும் சாதிய-மதவாத பாகுபாடுகள் குறித்தும் விசாரிக்க மற்றொரு மனுவும் மஜக சார்பில் கொடுக்கப்பட்டது. இச்சந்திப்பில் மத, மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், இணைப் பொதுச் செயலாளர் J.S. ரிபாயி, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில துணை செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...