Friday, March 29, 2024

பிலால் நகர் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவியவர்களுக்கு பிலால் நகர் ஜமாஅத்தார்கள் நன்றி

Share post:

Date:

- Advertisement -

மிகவும் பின்தங்கிய பகுதியான ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் 1வது வார்டு பகுதியில் பல வருட காத்திருப்புகளுக்குப் பின் முதற்கட்டமாக அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை,
350 மீட்டர் தார்சாலை – 1
320 மீட்டர் தார்சாலை – 1
130 மீட்டர் சிமென்ட் சாலை – 1
125 மீட்டர் சிமென்ட் சாலை – 1
550 மீட்டர் கழிவுநீர் கால்வாய் – 1
295 மீட்டர் கழிவுநீர் கால்வாய் – 1
என பணிகள் துவங்கி படிப்படியாக நிறைவுற்று வருகின்றன.

இப்பணிகள் யாவும் நிறைவுற்றிட ஏதுவாக பரிந்துரை செய்தவர்கள், நிதி ஒதுக்கீடு செய்தவர்கள், ஒப்புதல் வழங்கியவர்கள், திட்டம் தயாரித்தவர்கள், கோரிக்கை வைத்தவர்கள் என அனைவருக்கும் நன்றி செலுத்திடுமுகமாக இன்று 1 வது வார்டு கவுன்சிலரும் பிலால் நகர் ஜமாஅத் செயலாளருமான கமாலுதீன் அவர்கள் தலைமையில் பிலால் நகர் ஜமாஅத் தலைவர் முஹமது அமீன், துணைத் தலைவர் பஷீர் அஹமது, பொருளாளர் (பொறுப்பு) நிஜாஸ் அஹமது, பிலால் பள்ளி நிர்வாகி அஸார் மற்றும் தெரு முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் சூழ பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.கா.அண்ணாதுரை அவர்களுக்கும், பட்டுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் திரு. T. பழனிவேலு அவர்களுக்கும், ஒன்றிய பிரதிநிதி திரு. N. சுரேஷ் அவர்களுக்கும், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் திரு. S. சக்தி அவர்களுக்கும், ஊராட்சி மன்ற செயலாளர் திருமதி. கலா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டதுடன் புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் தருமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...