அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தங்களது வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொண்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கபசுர குடினீர், ஆயுஸ் குடிநீர், டவல், மாஸ்க், சோப், பற்பசை, பாதாம், பிஸ்த்தா, முந்திரி, பிஸ்கட், ரஸ்க் போன்ற பதினைந்துக்கும் மேற்ப்பட்ட பொருட்கள் அடங்கிய பைகள் சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S.சாகுல் ஹமீது, முன்னால் செயலாளர் Rtn.Z.அகமது மன்சூர், உறுப்பினர்கள் Rtn.முகமது சம்சுதீன், Rtn.லக்சுமணன் மற்றும் சமூக ஆர்வலர் அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.