தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் சமுதாய நல மன்றம் சார்பாக 65 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர்.
கொரோனா ஊரடங்கினால் பாதிகப்பட்டு வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கும்,ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என சமுதாய நல மன்றம் சார்பாக முடிவு செய்யப்பட்டது.
இதில் வீட்டிற்கு தேவையான அரிசி,சமையல் எண்ணெய்,பருப்பு,உப்பு,சீனி, மசாலா வகைகள் உள்ளடக்கிய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை இருந்தன.
இவைகள் அடங்கிய 65 நிவாரண பொதிகள் மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்றம் சார்பாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.