தஞ்சாவூர் மாவட்டம் சரபென்றராஜன்பட்டினம் ஊராட்சியின் மல்லிப்பட்டினம் ரேஷன் கடையில் கொரோனா பேரிடர் கால இரண்டாம் கட்ட நிவாரணத்தொகை ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா பேரிடர் நிவாரண தொகையாக நான்காயிரம் ரூபாய் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
கடந்த மே மாதம் முதற்கட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாம்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் ஜூன் 15 முதல் வழங்கப்பட்டு வருகிறது, இதோடு 14 வகையான நிவாரணப் பொருட்கள் சேர்த்து வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் நியாய விலை கடையில் ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றாவது வார்டு பகுதி மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கொரோனா பேரிடர் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.