Friday, April 19, 2024

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரையில் 4 இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தொட்டுவிட்டது.

இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிரையில் நான்கு இடங்களில் இன்று காலை இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது, அதிரை நகர தலைவர் அஹமது அஸ்லம், நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர இணைச் செயலாளர் அகமது, நகர செயற்குழு உறுப்பினர்கள் ஜர்ஜிஸ் அகமது மற்றும் கிளை நிர்வாகிகள் ஜமால் முஹம்மது ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாகைகள் ஏந்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...