தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் SDPI கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் முகமது அஸ்கர் சிறப்பு அழைப்பாளராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டார்.மேலும் ஆர்ப்பாட்டத்தில் நகர துணைத்தலைவர் ஜெய்லானி,நகரச்செயலாளர் ஜவாஹீர்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகரத்துணைத்தலைவர் பாவா முகைதீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.