கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் தமிழகம் தத்தளித்து கொண்டுள்ளன.இதனிடையே சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில் மளிகை,காய்கனி, இறைச்சி ஆகிய கடைகள் நிபந்தனையுடன் திறக்க அனுமதி வழங்கியுள்ளன.இதனை சரியாக கையாள உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினத்திற்கு வருகைதந்த துணை ஆட்சியர் பாலசந்திரன் நிபந்தனைகளை மீறிய வனிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.மேலும்.முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு தண்டனை வழங்கினார்.இந்த திடீர் ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர்,சுகாதார ஆய்வாளர்,வருவாய் துறை அதிகாரிகள்,கிராம நிர்வாக அதிகாரி,காவல் துறையினர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.