அதிராம்பட்டிணம் மின்சார வாரியத்தில் 33 கிலோவாட் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து முறையான முன் அறிவிப்பு ஏதுமின்றி இம் மின்வெட்டு தொடரும் நிலையில், மின்வாரிய தொலைபேசி எண்னை தொடர்பு கொண்டால் ரெஸ்பான்ஸ் இல்லை. அது போக மின் வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்ற தகவல்.
இதனால் விரக்தியடைந்த மின் நுகர்வோர்கள் ஒன்றினைந்து சற்று நேரத்தில் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட இருக்கிறார்கள். பொதுமக்கள், வணிகர்கள் கலந்து கொள்ளும் இப்போராட்டத்தில் தாங்களும் களந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என அழைக்கப்படுகிறார்கள்.