நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அமமுக கூட்டணியில் SDPI கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில் பாளையங்கோட்டையில், SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட்டார். இதில் காலை 11 மணி நிலவரப்படி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அப்துல் வகாப் 19,483 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 2364 வாக்குகளை பெற்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நெல்லை முபாரக்.