Friday, April 19, 2024

3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – 50 பேர் படுகாயம்!

Share post:

Date:

- Advertisement -

தேனி அருகே மழை காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் சரக்கு வாகனம் மீது பேருந்தும், பேருந்து மீது காரும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் சம்ப இடத்திலேயே பலியானார்.
ஓமலூரை சேர்ந்த ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு தனியார் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, அருகே மழை காரணமாக போதிய வெளிச்சம் இன்றி, நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது பேருந்தும், பேருந்து மீது காரும், பயங்கரமாக மோதியது.

 

இந்த விபத்தில் சரக்கு வாகன ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் வந்த 50 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...