நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மேலும் 5 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதாக அக்கட்சி அறிவித்தது. அதன்படி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு திமுக அழுத்தமான குரல் கொடுக்கும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பை இஸ்லாமியர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் எட்டுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படாது, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் அமைய அனுமதி அளிக்கப்படாது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை EIA 2020 நிராகரிக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.