Tuesday, April 23, 2024

அச்சுறுத்தும் சிலிண்டர் விலை.. இரண்டே மாதத்தில் ரூ.225 உயர்வு !

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல், டீசல் விலையை போன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாதந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருகிறது. பிப்ரவரி 1ல் 25 ரூபாயும், 15ம் தேதி 50ம் என அதிகரித்த கேஸ் விலை 25ம் தேதி கூடுதலாக 25 ரூபாய் உயர்த்தப்பட்டதில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது.

ஏற்கெனவே தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் பொதுமக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், சமையல் சிலிண்டரின் விலை உயர்வு பொதுமக்களுக்கு மேலும் அடியை கொடுத்துள்ளது.

இப்படி இருக்கையில், மார்ச் 1ம் தேதியான இன்று சமையல் கேஸின் விலை மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 610 ரூபாயக இருந்த கேஸ் விலை ஜனவரி 1ல் 710, பிப்ரவரில் 810 என உயர்ந்து தற்போது வரையில் இரண்டே மாதங்களில் 225 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களை பெரும் அதிர்ச்சியிலும், மீளாத் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...