வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதனை அடுத்து தேர்தல் அதிகாரிகள் நியமிக்கும் பணியினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதில் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்களை தேர்தல் பணிக்கு தாயர் நிலையில் இருக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளன.
அதில் முக்கியமாக களப்பணியாளர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி கட்டாயம் என குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
தேர்தல் பரப்புரைகளில் லட்சக்கணக்கான மக்களை சந்திக்கும் அரசியல் பிரமுகர்கள்,யாரும் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ள நிர்பந்திக்காத அரசு, அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிபந்தனை விதிப்பது சந்தேகத்தை வலுப்படுத்தும்.
எனவே மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் முதல்வர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தன்னார்வமாக கொரோனா தடுப்பூசி போட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.