Friday, March 29, 2024

நோன்பு கஞ்சிக்கான அரிசியை பெற விண்ணப்பிக்கலாம்

Share post:

Date:

- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்ச பள்ளி வாசல்களுக்கு சலுகை விலையில் பச்சரிசி வழங்குவது போல இந்த ஆண்டும் வழங்க தமிழக அரசு உரிய முன்னெடுப்புகளை செய்திருந்தன. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டன இதனால் பள்ளிகளுக்கான அரிசி வழங்கப்படுமா என்ற ஐயப்பாடு ஜமாத்தார்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதுகுறித்து துறை சார்ந்த இலாக்கா அதிகாரிகளிடம் விசாரித்த வகையில், ரமலான் மாத தொடக்கத்திற்க்கு முன்பாகவே தேர்தல் முடிவுற்று விடும் என்றும் வழக்கம்போல் இவ்வருடமும் கஞ்சிக்கான அரிசியை சலுகை விலையில் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

எனவே பட்டுக்கோட்டை வட்டார ஜமாத்தார்கள் தங்களின் பள்ளிகளுக்கு தேவையான அரிசியை பெற்றுகொள்ள முன் கூட்டியே விண்ணபித்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் கபீர் கேட்டு கொண்டுள்ளார்.

சமூக ஆர்வலர் கபீர்

இது குறித்து எம்மிடம் பேசிய அவர், கடந்த வருடம் வரை அரிசிக்கு விண்ணபிக்காத பள்ளிவாசலின் நிர்வாகிகள் தம்மை தொடர்புகொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.

அதிராம்பட்டிணம் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராம பள்ளிவாசல்களுக்கும் கஞ்சிக்கான அரிசியை பெற்று கொடுக்க தாம் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

தொடர்புக்கு: +91 98945 47032

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...