Wednesday, April 24, 2024

அதிகார திமிரில் திரியும் காவல்துறையினருக்கு சவுக்கடி கொடுத்த தீர்ப்பு! அதிரையர்களுக்கு இலியாஸ் வழக்கு சொல்லும் செய்தி என்ன?

Share post:

Date:

- Advertisement -

2013ஆம் ஆண்டு மல்லிப்பட்டினம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தஞ்சை மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அதிரை இலியாஸை புதுபட்டினம் அருகே வழிமறித்து உதவி ஆய்வாளர்கள் ராஜ்கமல், ரவிச்சந்திரன், பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் கொடூர தாக்குதல் நடத்தி பொய் வழக்கு போட முயன்றனர். இதனையடுத்து அவரை மீட்ட சக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் அதிரை இலியாஸ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெய்ச்சந்திரன் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 3 உதவி ஆய்வாளர்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, சாமானியர்கள் தொடர்ச்சியான சட்ட போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் இதுபோன்ற வெற்றியை பெறலாம் என்றும், அதிகார திமிரில் அலையும் சிலருக்கு இத்தீர்ப்பு சவுக்கடி எனவும் கூறினார். மேலும் அதிரையர்கள் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து அறிந்து விழிப்புடன் இருப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

மீள்பதிவு
http://adiraixpress.com/17388/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...