Thursday, April 18, 2024

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 85 வது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது !!

Share post:

Date:

- Advertisement -

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 85-வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/02/2021 ZOOM-APP எனும் காணொளி மூலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. நிஜாமுதீன் ( ஆலோசகர் )

சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

அறிக்கை வாசித்தல் : சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
நன்றியுரை : சகோ. A. சாதிக் அகமது ( இணைத்தலைவர் )

தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் இம்மாதம் இறுதிக்குள் ரியாத் பைத்துல்மால் பொறுப்புதாரி ஒருவரின் சார்பாக ஒரு தையல்மிஷின் பைத்துல்மால் மூலம் தேர்வு செய்யப்பட்ட நமதூர் ஆதரவற்ற ஒரு ஏழை குடும்பத்திற்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் அன்பளிப்பாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2) ரியாத் கிளை சார்பாக முதல் முறையாக 35 நபர்களுக்கான ஆதரவற்ற ஏழைகளின் திட்டமான பெண்களின் பென்ஷன் திட்டத்தில் பங்கீடு வழங்குவதென உறுதியளித்து மேலும் அத்திட்டத்தில் மிகவும் நலிவடைந்த ஆதரவற்ற ஆண்களையும் இணைப்பது விஷயமாக தலைமையக்கத்துடன் ஒத்துழைப்பு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. . அதற்கான ஆதரவும் பொருளாதார உதவியும் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.

3) பைத்துல்மாலின் சேவை திட்டத்தின் தார்பாய், கல்வித்தொகை, மருத்துவ உதவி, திருமண உதவி போன்ற பல சேவைகள் தொடர்ச்சியாக திறம்பட செயல்படுவதற்காக முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

4) பைத்துல்மாலின் மருத்துவத்திட்டமான டயாலிசிஸ் ( சிறு நீராக கோளாறு ) கேன்சர் போன்ற கொடிய நோய்களின் மருத்துவ உதவிக்கான நிதியின் பற்றாக்குறை மற்றும் தேவையினை தலைமையகம் மூலம் வந்த தகவலை மீண்டும் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு அதற்கான நிதி உதவும் நபர்கள் ரியாத்கிளை மூலமோ அல்லது தலைமையகம் மூலமோ நிதி உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் இவ்வருட மெகா கூட்டமான ( இஃப்த்தார் நிகழ்ச்சியை ) இக்காலத்தின் சூழ்நிலைக்கேற்ப நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த 86-வது அமர்வு மார்ச் 12ம் தேதி நடைபெறும். காணொளிமூலமோ அல்லது நேரடியாகவோ இதைப்பற்றிய முழுவிபரம் பின்னர் அறிவிக்கப்படும், அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...