Friday, April 19, 2024

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை: டோக்கன்கள் நாளை முதல் விநியோகம் என அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் வரும் 15ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் மாநகர் போக்குவரத்தக் கழகம் அறிவித்துள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் திட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டம் தற்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகருக்குட்பட்ட தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களுடன் வந்து இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன்களை அருகில் உள்ள பணிமனைகளில் பெற்றுக் கொள்ளுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.என்ன தேவை?

சென்னை மாநகர் போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 60 வயது நிறைவடைந்ததற்கான சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் காட்டி மாதம் 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு தேவையான டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்.

அலுவலக நாட்களில் காலை 8 மணி முதல் தொடங்கி இரவு 7.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கும் இடங்கள்:

பணிமனைகள்:

அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதை, மத்திய பணிமனை, குரோம்பேட்டை – 1, ஆலந்தூர், அய்யப்பந்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, அயனாவரம், தண்டையார் பேட்டை -1, எண்ணூர், வியாசர்பாடி, மாதவரம், பாடியநல்லூர்

பேருந்து நிலையங்கள்:

செண்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, பல்லாவரம், தாம்பரம் மெப்ஸ், கிண்டி எஸ்டேட், பூந்தமல்லி, வேளச்சேரி, கோயம்பேடு, அம்பத்தூர் ஓடி, வில்லிவாக்கம், பெரம்பூர், திருவொற்றியூர், சுங்கச்சாவடி, வள்ளலார் நகர், எம்.கே.பி நகர், செங்குன்றம், செம்மஞ்சேரி, சைதை, பெசண்ட் நகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...