Friday, April 19, 2024

முஸ்லீம் கணவருடன் இணைந்து வாழ விரும்புவதாக மதம் மாறிய ஹாதியா பரபரப்பு பேட்டி!

Share post:

Date:

- Advertisement -

 

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஹாதியாவை அவரது பெற்றோர் கொச்சி நகரில் உள்ள நெடும்பஞ்சேரி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

 

பெண் போலீஸ் துணையுடன் காரில் அமர்ந்திருந்த ஹாதியாவை பேட்டிகாண கொச்சி விமான நிலையத்தில் பத்திரிகை நிருபர்கள் குவிந்திருந்தனர். அவர்களை காரின் அருகே நெருங்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

 

அங்கு நிலவிய கூச்சல் குழப்பத்துக்கு இடையே., ‘நான் ஒரு முஸ்லிம். என்னை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. எனது கணவருடன் சேர்ந்திருக்க விரும்புகிறேன்’ என ஹாதியா கூச்சலிட்டார். இதனால், அங்கு மேலும் பரபரப்பு கூடியது.

 

அவரை மேற்கொண்டு பேச விடாமல் பெற்றோரும், போலீசாரும் விமான நிலையத்துக்குள் இழுத்து சென்றதாகவும், அங்கிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அவர்கள் புறப்பட்டு சென்றதாகவும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...