மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் 15 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று பேரூந்து நிலையம் அருகே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியுள்ளது.
இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு ஏஜே.ஜியாவுதீன், அக்ரி பரமசிவன், விதலை மறவன் ஆகியோர் ஒருங்கிணைத்து, தங்ககுமரவேல் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.