தஞ்சை மாவட்டம்,மதுக்கூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர்க்கலப்பையை வைத்துக்கொண்டு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன்,மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நூருல் அமீன்,மல்லிப்பட்டிணம் நகர கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார்,மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நாகூர்கனி,காதர்ஷா மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.