தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடத்திலிருந்து கழிவுநீர் வெளியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் செல்ல முறையான வழி (செப்டிக் டேங்) ஏற்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பேரூராட்சியில் மனு கொடுத்தனர்.
விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்டண கழிப்பிடத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.