நிவர் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிராம்பட்டினம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வந்த தொடர்மழை தற்போது ஓய்ந்துவிட்டது.
ஆனால், வங்க கடலில் நாளை (நவம்பர் 29) மீண்டுமெொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரணனமாக அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் திடீர் மழை பெய்தது, இதன் காரணமாக அதிரையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இதனிடையே எதிர்வரும் புரெவி புயல் அதிராம்பட்டினம் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இப்புயலால் ஏற்படும் இடர்பாடுகளை நீக்க அதிராம்பட்டினம்,மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த CBD தன்னார்வலர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவிக்கின்றனர்.