அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு தண்ணீர் டேங்க் அருகில் அமைந்துள்ள இந்த மின்கம்பம் பலநாட்களாக பழுதாகி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
இந்த வழியாக பொதுமக்கள் குழந்தைகள் அனைவரும் இதனை கடந்து செல்கின்றனர். மழை காலமாக இருக்கும் இந்நேரத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்பே அதிரை மின்வாரியம் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக இந்த மின்கம்பத்தை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.