Thursday, March 28, 2024

கொரோனா: டெல்லியில் மீண்டும் ஊரடங்கு?

Share post:

Date:

- Advertisement -

டெல்லியில் மீண்டும் கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து கட்டுப்படுத்த அரசு திணறி வந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை சீரான நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு மினி ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. 

இதனால் மக்கள் கலக்கம் அடைந்தனர். ஆனால் ஊரடறங்கு எதுவும் பிறப்பிக்கப்போவதில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருக்கிறது என்றும், மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...