ப்ரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டே எனும் பத்திரிக்கை அவ்வப்போது இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்ககூடிய முஹம்மது நபியை கேலியாக சித்திரம் வரைந்து வெளியீடு செய்து வாங்க்கி கட்டி கொள்வது வாடிக்கை.
அந்த வகையில் சமிபத்தில் முஹம்மது நபியை பற்றி கேலியாக சித்திரம் வரைந்து சர்ச்சையை ஏர்படுத்தினர். இதற்க்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் ஆதரவாக பேசியது உலகரங்கில் சர்ச்சை ஆனது.
இதனை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று அதிராம்பட்டினம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இதில் ஏராளமான ஆணகள் பெண்கள் குழந்தைகளுடன்,கையில் ஃப்ரான்ஸ்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதில் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.