Thursday, March 28, 2024

அதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் (படங்கள்)!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் சார்பாக அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை கைப்பற்றியதை தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணிகள் அதிரையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களும்,மாற்றங்களும் அரங்கேறத் துவங்கின.கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா – தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  இந்தநிலையில், இரட்டை இலைச் சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக பேருந்து நிலையத்தில் பட்டாசு கொளுத்தி,இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.இந்த கொண்டாட்டத்தில் அதிமுக நகர கழக செயலாளர் A.பிச்சை,நகர துணைச் செயலாளர் MA தமீம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...