அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜாமடத்தை சேர்ந்த அண்ணாதுரை வயது (50), அதிரை (ECR) கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு ராஜாமடம் நோக்கி சென்ற போது எதிரே வந்த கார் அண்ணாதுரை மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அதிரை தமுமுக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.