தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது.
அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வாட்டி வதைத்து வந்த வெப்பத்திற்கு குட் – பை சொல்லி அனுப்பி அவ்வப்போது மழை வெளுத்து வருகிறது.
இன்று காலை முதல் அதிரையில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, மதியம் 2.30 மணியளவில் கருமேகங்கள் சூழ மழை கொட்டி தீர்த்தது. இதனால் அதிரை நகரம் முழுவதும் குளுகுளுவென கலக்கலான கிளைமேட் நிலவி வருவதால் அதிரையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.