இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீதும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு மீதும் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர தலைவர் காளிதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவதூறு பரப்பியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.