கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதன்படி அணைக்கரை, நீலத்தநல்லூர், விளாங்குடி, பெரியார் மணியம்மை தனிமை படுத்தும் மையம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம், அதிராம்பட்டினம், பேராவூரணி, வல்லம், பட்டீஸ்வரம் நடமாடும் பரிசோதனை மையம், முருக்கங்குடி, கோனுலம்பள்ளம், கபிஸ்தலம், நடுக்காவேரி, மெலட்டூர், திருவோணம், தொண்டராம்பட்டு, மதுக்கூர், செருவாவிடுதி, அழகியநாயகிபுரம், பாலையப்பட்டி, தாமரங்கொட்டை, ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றது.
எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடல்நிலை சரியில்லாதவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.