Friday, April 19, 2024

அதிரை நீர்நிலைகளில் முறையாக தூர்வார வேண்டும்! SDPI கட்சியினர் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கரிசல்மணி ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகளவில் ஒரே இடத்தில் பள்ளம் தோண்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து களத்தில்.இறங்கிய அதிரை SDPI கட்சியினர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் சுவை மாறும் என்றும் இதனை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது என தெரிவித்தனர்.

இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சார் ஆட்சியரை சந்தித்த SDPI கட்சியினர், அரசு அனுமதிக்கப்பட்ட அளவில் அனைத்து பகுதிகளும் முறையாக தூர்வார வேண்டும், கரைகளை பலப்படுத்தி அதிரை நீர் நிலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அக்கட்சியின் மாவட்ட தலைவர் புகாரி தலைமயில் சென்ற குழுவினர் மனுவாக வழங்கினர்.

இதனை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு விரைவாக தண்ணீர் வழங்க ஆவண செய்வதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...