Friday, March 29, 2024

கோவிலுக்குள் சென்று வழிபட்டதால் சுட்டுக்கொல்லப்பட்ட தலித் சிறுவன் – உத்தரபிரதேசத்தில் கொடூரம் !

Share post:

Date:

- Advertisement -

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஜாதிக் கொடுமை நடந்துள்ளது. கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்ததற்காக ஒரு தலித் சிறுவனை உயர் ஜாதிக்காரர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற செயல் அதிர்ச்சி அளித்துள்ளது.

கொல்லப்பட்ட இளைஞனின் பெயர் விகாஸ் குமார் ஜாதவ். 17 வயசுதான் ஆகிறது.. இந்தப் பையன், ஓம் பிரகாஷ் ஜாதவ் என்பவரின் மகன் ஆவார். ஓம் பிரகாஷ் ஜாதவ் ரொம்ப ஏழையான விவசாயி ஆவார். தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

சமீபத்தில் அங்குள்ள கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார் விகாஸ் குமார் ஜாதவ். ஆனால் கோவிலுக்குள் நீ போகக் கூடாது என்று உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர் எதிர்த்துள்ளனர்.

அதை மீறி போய் சாமி கும்பிட்டார் விகாஸ் குமார். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு நான்கு இளைஞர்கள் சேர்ந்து விகாஸ் குமாரை தலையிலும், உடம்பிலும் சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டனர்.

இதுகுறித்து விகாஸின் தந்தை கூறுகையில், “எனது மகன் ஜூன் 1ம் தேதி தோம்கேரா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டான். அதை அந்த ஜாதியினர் எதிர்த்தனர். ஆனால் எனது மகன் அதைப் பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு விட்டு வந்தான். இந்த நிலையில் அந்த ஜாதியைச் சேர்ந்த ஹோரம் செளகான் என்பவர் உள்பட நான்கு பேர் சேர்ந்து எனது மகனை சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்று விட்டனர்.

அவன் கோவிலுக்கு போன அன்றே பலர் கூடி அவனை அடித்தனர். இதுதொடர்பாக போலீஸில் புகாரும் கொடுத்தோம். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கலை. எடுத்திருந்தால் என் மகன் இன்று உயிர் பிழைத்திருப்பான். சனிக்கிழமை இரவு ஹோரமும், அவனது குரூப்பைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து கொலை செய்து விட்டனர். வீட்டுக்குள் புகுந்து எனது மகனை வெளியே இழுத்துச் சென்று சுட்டுக் கொன்று விட்டனர் என்றார் அவர்.

இந்த கிராமத்தில் ஜாதவ் மற்றும் வால்மீகி ஆகிய தலித் வகுப்பைப் சேர்ந்தவர்களும், தாக்கூர் என்ற உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களும் வசிக்கின்றனர். அடிக்கடி இரு தரப்புக்கும் இடையே மோதல் மூளுவது வழக்கம். பெரும்பாலும் கோவிலுக்குள் தலித்கள் போய் விட்டாலே தாக்க ஆரம்பித்து விடுவார்களாம். இதற்கிடையே விகாஸ் கொலையில் ஜாதியோ அல்லது தீண்டாமையோ இருப்பதாக தெரியவில்லை என போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

Source : One India Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...